×

விருதுநகர் அருகே வீட்டில் வளர்ந்த சந்தன மரம் வெட்டி கடத்தல்

விருதுநகர், செப். 10: விருதுநகர் அருகே வீட்டில் வளர்ந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விருதுநகர் அருகே சூலக்கரை மார்டன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளர் நலத்துறை அலுவலர் திருமால், தனது வீட்டில் இரு சந்தன மரங்களை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டி தூங்கிய நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி 20 அடி உயரம் உள்ள சந்தன மரத்தின் தூர்பகுதியில் இருந்து அறுத்து சாய்த்து 12 அடி வரை அறுத்து எடுத்து சென்றுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் வீட்டின் பின்பகுதியை திறந்து பார்த்த போது சந்தன மரம் அறுக்கப்பட்டு திருடி சென்றதை அறிந்த திருமால் சூலக்கரை போலீசில் புகார் அளித்துள்ளார். சூலக்கரை போலீசில் திருமால் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...