×

கஞ்சா விற்றவர் கைது

வடமதுரை, செப். 10: வடமதுரை, அய்யலூர், தென்னம்பட்டி, ஆலம்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக வருவதாக தொடர்ந்து மாவட்ட எஸ்பி பாஸ்கரனுக்கு புகார்கள் வந்ததன். அதன்பேரில் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி ஆலோசனைப்படி வடமதுரை எஸ்ஐ கிருஷ்ணவேணி மற்றும் தனிப்படை போலீசார் நேற்று காலை வடமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமதுரை அருகேயுள்ள வி.எஸ்.கோட்டையில் சந்தேகத்திற்கு இடமான ஒருவரை பிடித்து விசாரித்ததில் கம்பிளியம்பட்டியை சேர்ந்த விவேக்குமார் (30) என்பது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 800 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விவேக்குமாரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Ganja seller ,
× RELATED கஞ்சா விற்றவர் கைது