திருப்புவனம், செப்.10: திருப்புவனம் அருகே அச்சங்குளத்தில் திருசாஸ்தா அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. அச்சங்குளத்தில் உள்ள அழகுநாச்சியம்மன், சோலச்சி அம்மன் மற்றும் திருசாஸ்தா அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா கடந்த ஒருவாரமாக கிராம மக்கள் காப்புக்கட்டி விரதமிருந்து வந்தனர். நேற்று முன்தினம் அலகுடையான் வேளார் மடத்திலிருந்து பக்தர்கள் குதிரைகள் எடுத்து ஊர்வலமாக வந்து அச்சங்குளம் அய்யனார் கோயிலில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.