×

விண்ணப்பிக்க அழைப்பு ஜெயங்கொண்டத்தில் 1200 மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

ஜெயங்கொண்டம்,செப்.10: ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1200 மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாத்திரைகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கி துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், தேசிய குடற்புழு நிக்கம் தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 1200 மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

Tags : Jayangonda ,
× RELATED அமைச்சர் சிவசங்கர் காரில் பறக்கும்படை சோதனை