×

கங்கைகொண்ட சோழபுரத்தில் பவுர்ணமி கிரிவலம்

ஜெயங்கொண்டம், செப்.10:  கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் ஆலய கிரிவல பெருவிழா நேற்று நடைபெற்றது. கிரிவல பெருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை 3 மணிக்கு அருள்மிகு கணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மாலை 4.30 மணிக்கு  பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் துவங்கி நடைபெற்றது. கிரிவலம் கோயிலில் துவங்கி வன்னியர்குழி, கணக்க விநாயகர் கோயில் வழியாக சென்று மீண்டும் பிரகதீஸ்வரர் கோயிலை வந்தடைந்தது. கோயிலில் 7 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. கிரிவல பெருவிழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞர் அணியினர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Pournami ,Gangaikonda Cholapuram ,
× RELATED சித்ரா பவுர்ணமி கிரிவலம்...