×

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் வாரிசுகள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்,செப்.10: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் வாரிசுகள் தொகுப்பு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இருந்து ராணுவப் பணியில் சேர்ந்து பயிற்சி பெறும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் வகையில் தொகுப்பு நிதியிலிருந்து தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி முப்படையில் நிரந்தர படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப்பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத்துறை அலுவலர் பணிக்கு தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர பதவிகளின் பணிக்காக தேர்வுப் பெற்று பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் தகவல் அறிய நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பயன் பெறலாம். அல்லது தொலைபேசி எண் 04365 -299765 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Nagapattinam District ,
× RELATED பெண் போலீசுடன் தனிமையில் இருந்த...