×

கறிவேப்பிலை செடிகளில் களைபறிப்பு கரூர்- திருச்சி பைபாஸ் சாலை வீரராக்கியம் பிரிவில் வாகன விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கரூர், செப்.10: கரூர்-திருச்சி பைபாஸ் சாலை வீரராக்கியம் பிரிவு அருகே எளிதான போக்குவரத்து நடைபெறும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர், கோவை, சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும் கரூர் திருச்சி பைபாஸ் சாலை வீரராக்கியம் பிரிவு வழியாக செல்கிறது. இதே போல், திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் போன்ற பகுதிகளுக்கு வரும் வாகனங்களும் இதே சாலையின் வழியாக செல்கிறது. வீரராக்கியம் பிரிவு பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கான சாலைகள் பிரிகிறது. இந்நிலையில், இந்த பிரிவுச் சாலையில், பல்வேறு கிராம பகுதிகளுக்கு மற்ற வாகனங்கள் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டதன் காரணமாக வீரராக்கியம் பிரிவு அருகே குகை வழிப்பாதை அல்லது உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பகுதியினர் அடிக்கடி இந்த பகுதியில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுநாள் வரை எந்தவித மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் அதிகளவு வாகனங்கள் சென்று வரும் பிரதான திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள வீரராக்கியம் பிரிவு அருகே விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Karur-Trichy ,Veerarakiyam ,
× RELATED 2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம்...