×

நீடாமங்கலம் - கிருஷ்ணகிரிக்கு அரவைக்கு 2,000 டன் நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம்,செப்.7: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்பட்ட நெல் மணிகள் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கூடுதலான நெல் மூட்டைகள் சரக்கு ரயில்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவை அனுப்பப்படுகிறது. அதே போன்று அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்களிலிருந்து அரவை செய்த அரிசிகளும் நீடாமங்கலத்திலிருந்து ரயில் பெட்டிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விநியோக திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று நவீன, அரிசி ஆலை சுந்தரகோட்டை, மத்திய சேமிப்பு கிடங்கு பாமனி, தெற்கு நத்தம், எடையர் நத்தம், மூவாநல்லூர், அஷேசம்ராஜகோபாலபுரம், ஆதனூர், பெருகவாழ்ந்தான், மூவாநல்லூர் உள்ளிட்ட திறந்த வெளி சேமிப்பு மையங்களிலிருந்து நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு 157 லாரிகளில் 2,000 டன் பொதுரக நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 42 ரயில் பெட்டிகளில் (வேகன்) சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி அரவைக்கு கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Aravai ,Needamangalam ,Krishnagiri ,
× RELATED நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில்...