×

புதுகை அருகே வெவ்வேறு சம்பவம் பைக் விபத்தில் தொழிலாளி, வாலிபர் பரிதாப பலி

புதுக்கோட்டை, செப். 7:  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆழ்வான்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல் மகன் சதீஷ்குமார்(35). கூலித்தொழிலாளி. இவர், அங்குராபட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார் (30) என்பவருடன் பைக்கில் ஆடு வாங்குவதற்காக நேற்றுமுன்தினம் சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டினார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது ஆழ்வான்பட்டி அருகே நிலைதடுமாறி பைக்கிலிருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் இருவரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த சதீஷ்குமார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் பலி: அரிமளம் அருகே பெருங்குடி அடுத்த குருந்தங்குடி பாலம்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன்(32). இவர், நேற்றுமுன்தினம் பைக்கில் அரிமளம் சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பைக் சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நீலகண்டன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Wolliber ,
× RELATED செல்போன்களை அதிக விலைக்கு விற்று...