×

வாங்கல் அருகே காவிரியாற்றில் இறந்தவர் சடலம் மீட்பு

கரூர், செப். 7: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே காவிரியாற்றில் அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள திருமுக்கூடலூர் காவரி ஆற்றில் 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக இந்த பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அடையாளம் தெரியாத நிலையில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனை மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து, இறந்து கிடந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cauvery river ,Wangal ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை