×

காரைக்குடி அருகே பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

காரைக்குடி, செப். 7: காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர், மடத்து தெருவை சேர்ந்த கைலாசம் மனைவி சந்திரா (62). இவர் அதே பகுதியில் ஆவின் பால் பூத் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் ஆவின் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, சந்திராவின் பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பியுள்ளார். சந்திரா கூச்சலிடவே செயினை பறித்த அந்நபர், நிறுத்தி இருந்த தனது டூவீலரை எடுத்து கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து சந்திரா புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறித்த நபரை தேடி வருகின்றனர்.
*******

Tags : Karaikudi ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!