×

நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல், செப். 7: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது:திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (செப். 7ம் தேதி, புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதால்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனை ஈடு செய்யும் வகையில் அக்.1ம் தேதி வேலை நாள் ஆகும். அவசர விடுமுறை என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Natham Mariamman Temple ,
× RELATED நத்தம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு...