×

கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு 151வது பிறந்த நாளையொட்டி வஉசி சிலைக்கு மாலை அணிவிப்பு அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருச்சி, செப்.6: சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன், இனிகோ இருதயராஜ், வெள்ளாளர் முன்னேற்ற சங்க கழக தலைவர் ஹரிஹரன், மண்டல குழு தலைவர் துர்கா தேவி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Minister ,Vausi ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...