×

அமைச்சர் சிவசங்கர் பேச்சு கோடாலி கருப்பூர் உக்கிர மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

தா.பழூர்,செப்.6: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  உக்கிர மகா காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதே போன்று  உக்கிர மகா காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் கருப்புசாமி கோயிலுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோடாலி கருப்பூர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி கமிட்டி குழுவினர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோடாலி கருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Minister ,Sivasankar ,Kodali Karuppur ,Ukra ,Maha Kaliamman Temple ,Kumbabhishekam ,Swami ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...