×

சீர்காழி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு

சீர்காழி, செப். 6: ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகள், மத்திய ரயில்வே துறை அமைச்சர் எம் பி, எம் எல் ஏ க்ளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால், சீர்காழி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அவரிடம் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் வர்த்தக சங்க நிர்வாகிகள், ரயில் உபயோகிப்பாளர்கள், சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சீர்காழியில் நின்று செல்லாத ரயில்களை நின்று செல்லவும்,குறிப்பாக அந்தியோதையா ரயிலை சீர்காழியில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சியில் ரயில்வே முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், சீர்காழி நகர வர்த்தக சங்கம் நிர்வாகிகள் கியான்சந்த் துரைராஜன், தில்லை நடராஜன், ஹரக்சந்த், சீர்காழி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Trichy ,Sirkazhi Railway Station ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...