×

கரூர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மக்களிடம் போலீசார் பலத்த சோதனை

கரூர், செப். 6: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பலவேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று மாவட்ட கலெக்டர் துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இதுபோல மனு கொடுக்க வந்த சிலர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றதால் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மனு கொடுக்க வரும் பொதுமக்களை போலீசார், நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தி, தீவிர சோதனை நடத்திய பிறகுதான் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்திலும் குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Karur Collector ,
× RELATED கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு...