×

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி

சென்னிமலை, செப். 6: ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளில் சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி கடந்த 42 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வருட விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கைலாசநாதர், சிவகாமி அம்மாள் மற்றும் வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி சகடை தேரில் எழுந்தருளினார். சென்னிமலை முருகன் கோயில் தலைமை குருக்கள் ராமநாத சிவாச்சாரியார் மற்றும் மதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஓதுவார் மூர்த்திஆனந்த் ஆகியோர் சிவபெருமானின் பிட்டு திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Lord Shiva ,Pit ,
× RELATED காமதகனமூர்த்தி