×

அருப்புக்கோட்டை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

அருப்புக்கோட்டை, செப். 6: அருப்புக்கோட்டை எஸ் பி கே ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்டின் தலைவர் காமராஜன் தலைமை தாங்கினார். உறவின்முறை செயலாளர் முத்துசாமி முன்னிலை வகிக்க, பள்ளிச் செயலாளர் மணி முருகன் வரவேற்ப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு நகர் மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம் தமிழக அரசு வழங்கிய விலையில்லா மிதிவண்டியை மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில் பள்ளி உபதலைவர் சார்லஸ், உபசெயலர் செந்தூரான் நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் டுவிங்கிளின் ஞானபிரபா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற உறுப்பினரும் பள்ளி செயலாளருமான மணி முருகன் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார். விழா முடிவில் பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

Tags : Aruppukkottai School free bicycle distribution ceremony ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?