காரியாபட்டி, செப். 6: காரியாபட்டி அருகே பிசிண்டி ஊராட்சி அரசு பள்ளி வளாகத்தில் உலக பாரம்பரிய சிலம்பாட்டம் கூட்டமைப்பு,முதல் ஆயுதம் சிலம்பாட்ட பள்ளி, கனிமவள சுற்றுச்சூழல் விவசாய சங்கமும் இணைந்து ஒன்றிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியை நேற்று நடத்தியது. 2 நாட்கள் நடந்த சிலம்பாட்ட போட்டிகளில் பல்வேறு கிராமங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கும் விழா நடந்தது. வழக்கறிஞர் செந்தில்குமார், சமூகஆர்வலர் ஜெயக்குமார், அன்னை தெரேசா இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அருண்குமார், கனிமவள நீர்வள சுற்றுச்சூழல் சங்கம் மாவட்ட தலைவர் திருமலை, முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாண்டி பெருமாள் தலைமை வகித்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் கண்ணன் மணிகண்டன், சின்னமணி, அபிமன்யூ ஆகியோர் செய்திருந்தனர்.