×

அருப்புக்கோட்டை அருகே பாலத்தின் மீது கார் மோதி விபத்து போலீசார் 2 பேர் படுகாயம்

அருப்புக்கோட்டை, செப். 6:காரியாபட்டி காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிபவர்கள் மணிகண்டன்(39) மற்றும் ரமேஷ்(43) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிக்காகச் சென்றுள்ளனர். பணி முடிந்ததும் இருவரும் ஒரு காரில் பாலவநத்தத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு இரவு 11.30 மணியளவில் கிளம்பியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் வந்த காரானது, அருப்புக்கோட்டை அருகே நமச்சிவாயபுரம் விலக்கு அருகில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.இவ்விபத்தில் காரில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...