×

விபத்தில் காயம் அடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் சி.வெ. கணேசன் ஆறுதல்

விருத்தாசலம், செப். 3: விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருந்த தனியார் கல்லூரி பேருந்தின் மீது டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 41 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதில் 2 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் மாணவர்களை நேற்று தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து தலைமை மருத்துவர் எழில் இடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு பிரட், பிஸ்கட், மற்றும் இரவு சிற்றுண்டி வழங்கியதுடன் சிகிச்சைகள் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் மருத்துவரிடம் தெரிவியுங்கள். மேலும் மேல் சிகிச்சை வேண்டும் என்றால் சென்னைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தருகிறேன் என கூறினார். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். நகர செயலாளர் தண்டபாணி, நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், மெக்கானிக் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்தகுமார், கார்த்திக், முத்துராமன், லோகு, பிரபு, நாராயணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : Minister ,C.V. ,
× RELATED முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...