×

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கல்

பேராவூரணி, செப்.3: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேலும் இந்தியாவின் இருளை அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்தின் பிரசுர புத்தகம் விற்பனை செய்யப்பட்டது . நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியக் குழு உறுப்பினர் ரெங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஜகுபர் அலி, வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடைவீதி வியாபாரிகள், பொதுமக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Tags : Marxist Commune ,Union Government ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலுக்கான...