×

ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் காயத்துடன் வாலிபர் சடலம் மீட்பு

ஜெயங்கொண்டம்,செப்.3: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலகுடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள இடையான்குளம் ஏரியில் மர்மமான முறையில் 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மிதந்த நிலையில் இறந்து கிடந்தார். இது பார்த்த பொதுமக்கள் பலரும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேல குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (37). என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பின்னர் அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததால் கூட்டம் கூடியது. ஜெயங்கொண்டம் போலீசார் இறந்த பழனிசாமியின் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயத்துடன் இருப்பதால் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். மர்மமான முறையில் தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அந்த பகுதி மக்கள் பெரும் பரபரப்பும் ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Jeyangondam ,
× RELATED பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு