×

உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

நாமக்கல், செப்.3: மானிய விலையில், இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும். தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பயன்பெற, உலமாக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவராக, 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை, கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ulamas ,
× RELATED மானிய விலையில் பைக் வாங்க வக்பு...