×

நான் முதல்வன் திட்ட விளக்க பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, செப்.3: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் தமிழக முதல்வரின் “நான் முதல்வன் திட்டம்” குறித்த புத்தொளிப் பயிற்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில், தமிழக முதல்வரின் “நான் முதல்வன் திட்டம்” குறித்த புத்தொளி பயிற்சி நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் அனுராதா தலைமை வகித்து, துவக்கி வைத்தார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயிற்றுநர் கார்த்திகேயன் பங்கேற்று, வங்கி நிதிச் சேவை மற்றும் காப்பீட்டுச் சேவை நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் குறித்து பயிற்சி அளித்து பேசினார். கல்லூரி பேராசிரியர்கள் வெங்கடேசன், ரவி, கிளாட்சன் ஜோஸ், பாலமுருகன், சிலம்பரசன், பீமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விளக்கி பேசினர். முகாமில் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயிலும் 700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குமரன் செய்திருந்தார்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்