×

பல்லடத்தில் சர்வர் பிரச்னையால் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரவிலும் பத்திரப்பதிவு

பல்லடம், செப்.2: பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சர்வர் பிரச்னையால் பத்திர பதிவு மிகவும் தாமதமாகி, நேற்று இரவிலும் பணி மும்முரமாக நடந்தது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் பத்திரப்பதிவு துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாதத்திற்கு சுமார் 1,600 ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நேற்று பத்திரப்பதிவு செய்ய 120 பேருக்கு நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். ஆனால், சர்வர் பிரச்னையால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை காலை முதலே நீடித்தது. இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதி இரவு 9 மணி வரை சார்பதிவாளர் பாலமுருக பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் 120 பேருக்கும் பத்திரப்பதிவை முழுமையாக பூர்த்தி செய்து கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு இரவிலும் பணியாற்றிய அதிகாரிகளின் மனிதாபிமான செயல் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

Tags : Palladam ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...