கோவில்பட்டி, செப். 2: கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப் ஆப் கோவில்பட்டி, ஜேசிஐ ஆகியவை சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவர் முத்துச்செல்வம், ஜேசிஐ தலைவர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் வரவேற்றார். புத்தக கண்காட்சியை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார் ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை தொடக்கி வைத்தார்.கண்காட்சியில் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, அறிவியல், மருத்துவம், கணிதம், ஆன்மீகம், போட்டித் தேர்வு நூல்கள், சிறுவர் நூல்கள், நாவல், இலக்கியம் உள்ளிட்ட பத்தாயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் 11ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மாரியப்பன், கிருஷ்ணசாமி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, முத்துமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்டமூர்த்தி நன்றி கூறினார்.