நெல்லை, செப். 2: பாளை அரசு அருங்காட்சியகத்தில் நெல்லை தினம் கொண்டாடப்பட்டது. மேலும் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னன் பூலித்தேவர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பூலித்தேவர் குறித்த வரலாற்று சிறப்புகளை காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி விளக்கிக் கூறினார். மேலும் நெல்ைல தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த வீடியோ மற்றும் நெல்லை மாவட்ட வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் வீடியோ படத்தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. இதை பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்து மகிழ்ந்தனர்.