×

பாளையில் பரிதாபம்; மாடிப்படியில் இருந்து விழுந்த தனியார் நிறுவன அதிகாரி பலி

நெல்லை, செப். 2:  பாளை சாந்திநகர் வஉசிநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சந்திரபாபு (68). தாழையூத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் சந்திரபாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கிய சந்திரபாபு, எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற பாளை போலீசார், சந்திரபாபுவின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pity ,Palai ,
× RELATED நெல்லை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது ‘‘போக்சோ”