×

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு

திருவில்லிபுத்தூர், செப். 2: ஆசிரியர் தினத்தையொட்டி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை கௌரவிக்கும் வகையில், ‘அன்புள்ள அக்காவிற்கு என்னும் கடிதம் எழுதும் நிகழ்ச்சியை, மாநில சிறப்பு அலுவலர் அறிமுகம் செய்துள்ளார். இதன்படி, திருவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில், ‘அன்புள்ள அக்காவிற்கு மடல் எழுதும் நிகழ்ச்சி மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசியதாவது:
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், குழந்தைகளுடன் நெருங்கி பழகி, அன்புடன் அறிவை போதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இல்லம் தேடிக் கல்வி மைய குழந்தைகள் தன்னார்வலர்களுக்கு, தங்களது நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதங்களை எழுதலாம். இவர்கள் எழுதும் கடிதம் புகைப்படமாக எடுக்கப்பட்டு, திட்டத்தின் சிறப்பு அலுவலரின் டெலிகிராம் குழுவில் பதிவு செய்ய வேண்டும்’ என்றார். இந்த நிகழ்ச்சியில், பானாங்குளம் குறுவளமைய தன்னார்வர் குழு தலைவர் லாவண்யா தேவி, லட்சுமியாபுரம் குறுவமளமைய தன்னார்வலர் குழு தலைவர் சிவகாமிஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தன்னார்வலர் சிவரஞ்சினி நன்றி கூறினார்.



Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...