×

வெங்கலகுறிச்சி முளைப்பாரி விழா

சாயல்குடி, செப்.2: வெங்கலகுறிச்சி வாழவந்தாள்அம்மாள் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. முதுகுளத்தூர் அருகே வெங்கலகுறிச்சி வாழவந்தாள்அம்மாள் கோயில் ஆவணி மாத திருவிழா கடந்த 10 தினங்களாக நடந்து வந்தது. முளைக்கொட்டு திண்ணையில் தினந்தோறும் பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் கொண்டாடினர். மூலவரான அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதணை, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடந்தது.மேலும் பொதுமக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நு£ற்றுக்கணக்கனோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் வைத்து கும்மியடித்து விட்டு, ஊரணியில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



Tags : Venkalakurichi Mulaipari Festival ,
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை