×

கோவில்பட்டி, விளாத்திகுளம், வைகுண்டத்தில் பூலித்தேவர் படத்திற்கு எம்எல்ஏக்கள் மரியாதை


கோவில்பட்டி, செப். 2: கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் பூலித்தேவர் படத்திற்கு எம்எல்ஏக்கள் மரியாதை செலுத்தினர். விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவரின் 307வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி கோவில்பட்டி  மெயின் ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் படத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர்  செல்லத்துரை தலைமை வகித்தார். இதில் மதிமுக மாநில  சொத்து பாதுகாப்பு குழு விநாயகா ரமேஷ், திருவள்ளுவர் மன்ற தலைவர்  கருத்தப்பாண்டி, இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன்,  சமூக ஆர்வலர் சம்பத்குமார், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர்  வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நாம் தமிழர் கட்சி செயலாளர் வழக்கறிஞர்  ரவிக்குமார், இன்னர் வீல் கிளப் பட்டய தலைவர் ஜெய கிறிஸ்டோபர்,  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் அமலபுஷ்பம், தமிழ்நாடு பெண்கள்  இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மேரி ஷீலா, ஐஎன்டியுசி பொதுச்செயலாளர்  ராஜசேகர், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக செயலாளர் ஆம்ஸ்ட்ராங்,  உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணை செயலாளர் முத்துசெல்வம்,  பகத்சிங் ரத்த தான கழக அறக்கட்டளை நிறுவனர் காளிதாஸ், தலைவர் ராஜபாண்டி,  காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

வீரவாஞ்சி நகர் தேவர் சமுதாயம் சார்பில் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர்  வெயிலுமுத்து, மனித உரிமை காக்கும் கட்சி தலைவர் சுடலைபாண்டியன், செயலாளர்  சிவன்சங்கர், மாயக்கண்ணன், வெள்ளக்குட்டி, கவுன்சிலர்கள் பூல்பாண்டியன்,  முத்துப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதேபோல் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு பூலித்தேவர் படத்துக்கு மார்க்கண்டேயன் எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் பேரூர் திமுக செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை துணை செயலாளர் ஐவர்ராஜா, விளாத்திகுளம் தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பூலித்தேவர் படத்துக்கு தெற்கு மாவட்ட மகளிரணி துணை தலைவி மங்களச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். வைகுண்டம் மேற்கு வட்டார தலைவர் நல்லகண்ணு தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிச்சையா, அலங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங். நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், நிலமுடையான், பஞ்சவர்ணம், ஜேம்ஸ், சித்திரை, முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti ,Vlathikulam ,Vaikundam ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...