×

அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்

கந்தர்வகோட்டை,ஆக.27: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் உத்தரவின்படி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் முதல் தவணை, இரண்டாம் தவணை, மற்றும் பூஸ்டர்டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அப்போது செவிலியர் அகிலாண்டேஸ்வரி கூறும்போது செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை தான் இலவசமாக வழங்கப்படும் என தெரிய வருவதால் அனைவரும் அதற்கு முன்பாக கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக கூறினார். செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் அனைவரும் தவறாது வந்து கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags : Minister ,Meiyanathan ,Corona Booster Dose Vaccination Camp ,Kandarvakot Taluk Office ,
× RELATED காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4...