×

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் மணல்மேடு அருகே தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது

மயிலாடுதுறை, ஆக. 27: மணல்மேடு அருகே வக்காரமாரி கிராமத்தில் சொத்தை பிரித்து தர வலியுறுத்தி தந்தையை அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே வக்காரமாரி அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராசமூர்த்தி (57). இவருக்கு 3 மகன்கள். அனைவரும் அருகருகே வசித்து வருகின்றனர். ராசமூர்த்தியின் மனைவி இறந்துவிட, அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது 2வது மகன் சிலம்பரசன் (30). இவர் தந்தையிடம் சொத்தைப் பிரித்து தர வலியுறுத்தி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் சிலம்பரசன் ராசமூர்த்தி அடித்து சொத்தை பிரித்து தராவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராசமூர்த்தி மணல்மேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மணல்மேடு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

Tags : Sandalmedu ,
× RELATED 4 ஆண்டுக்குமுன் தாயை கொன்ற சித்த மருத்துவர் சிக்கினார்