×

அரவைக்கு வந்த நெல் மூட்டைகள் பாஸ்போர்ட்டில் முறைகேடு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பயணி கைது

திருச்சி, ஆக.27: மலேசியாவிலிருந்து பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்து பயணித்தவரை திருச்சி விமான நிலைய போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உலையக்குன்னம் மேலநத்தம் பகுதியை சேர்ந்தவர் பரஞ்சோதி (32). இவர் நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரது பயண ஆவணங்களை, இமிகிரேஷன் அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, அவர் குடியேற்றப்பிரிவினர் அளித்ததுபோன்ற போலி முத்திரையை பாஸ்போர்ட்டில் பதிவு செய்து பயணித்தது தெரிந்தது. தொடர்ந்து, அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, பரஞ்சோதியை கைது செய்தனர்.

Tags : Paddy bundles ,Arawai ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...