×

போலி டிசி கொடுத்தவர் மீது வழக்கு

தொண்டி, ஆக.26: தொண்டி அருகே உள்ள பெருமானேந்தலை சேர்ந்தவர் அழகுராமன்(34). இவர் கடந்த 2011ம் வருடம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். மீண்டும் அதை புதுப்பித்து 2021ம் ஆண்டு பெற்றுள்ளார். அப்போது அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் மாற்றுச் சான்றிதழ் போலியானது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி சாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொண்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Tags : DC ,
× RELATED ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்!