பாலக்கோடு, ஆக.26: மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சரக அளவிலான மகளிருக்கான விளையாட்டு போட்டிகளை, மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதில், கைப்பந்து, கோகோ, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட மகளிர் பிரிவுகளுக்கான போட்டிகள் நடந்தது. இதில் சரக அளவிலான அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர். இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சேகர், முதன்மை நடுவர் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.