×

காஞ்சிபுரத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: கண்தான தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணியில்  செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பங்ேகற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். காஞ்சிபுரம்  சங்கரா மகளிர் செவிலியர் கல்லூரி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, காஞ்சிபுரம் அரசு செவிலியர் கல்லூரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகிய இணைந்து நேற்று கண்தான தினத்தை முன்னிட்டு கண்தான விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

சங்கரா கல்லூரி முதல்வர் ராதிகா தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா கண்தனம் செய்வதின்  முக்கியத்துவம் குறித்து பேசினார். மாவட்ட திட்ட மேலாளர் ஆனந்த் லட்சுமி கலந்துகொண்டு கண் தானம் செய்வது பற்றியும் கண் தானத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விரிவாக  எடுத்து கூறினார்.
பேரணி சங்கரா மகளிர் கல்லூரி தொடங்கி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வரை ஊர்வலமாக வந்தனர்.  இதில், ஏராளமான செவிலியர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Eye Awareness Rally ,Kangipura ,
× RELATED காஞ்சிபுரத்தில் கனமழை காரணமாக...