×

மேயர் சண்.ராமநாதன் தகவல் தஞ்சாவூர் அருகே பஸ்சிலிருந்து விழுந்து மாணவன் காயம் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

தஞ்சாவூர், ஆக.26: தஞ்சாவூர் அருகே பஸ்ஸில் இருந்து மாணவன் தவறி விழுந்த நிலையில் பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் வசந்த் (17). இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் வயலூர் பகுதியில் சென்றபோது பஸ்சிலிருந்து மாணவன் வசந்த் திடீரென தவறி கீழே விழுந்தான். இதில் அவனுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அந்த பஸ் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை- கும்பகோணம் சாலையில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் மாணவன் கீழே தவறி விழுந்த நிலையில் அந்த பேருந்து நிற்காமல் சென்றது குறித்து கண்டன குரல் எழுப்பினர். அப்போது புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Mayor ,San. Ramanathan ,Thanjavur ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!