×

காங்கயம், முத்தூர் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு; தாசில்தாரிடம் புகார்

காங்கயம், ஆக. 24: முத்தூர் அருகே மசூதி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காங்கயம் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர். காங்கயம் தலைமையிடத்து துணை தாசில்தார் கோபாலிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் தாலுகா, முத்தூர், பெருமாள்புதூர், சின்னமுத்தூர் ரோடு ஏழாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் முஸ்லிம்கள் யாரும் வசிக்கவில்லை. இப்பகுதியில் ஒரு இடத்தில் மசூதி கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேற்படி பகுதியில் மசூதி கட்ட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Muttur, Kangayam ,Tahsildar ,
× RELATED நச்சுக்காற்றால் பொதுமக்கள் பாதிப்பு;...