திருச்சி ஆக.23: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் 25 மனுக்கள் மீது தீர்வு காண மேயர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த குறைதீர் கூட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது உாிய விசாரணை நடத்தி தீா்வுகள் காணப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 25 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களை பெற்ற திருச்சி மாநகராட்சி மேயா் அன்பழகன் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்களை விசாரித்து உாிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த குறைதீர் முகாமில் துணை மேயா் திவ்யா, மண்டலக்குழு தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி மற்றும் மாநகராட்சியின் நகர, துணை ஆணையா், உதவி ஆணையா்கள் உள்ளிட்டவா்கள் பங்கேற்றனா்.