×

பைனான்சியர் கொலை வழக்கில் திருவையாறு நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

திருவையாறு, ஆக.23: வேளாங்கண்ணியில் நடந்த பைனான்சியர் மனோகரன் கொலை வழக்கு தொடர்பாக திருவையாறு நீதிமன்றத்தில் 4 பேர் நேற்று சரணடைந்தனர. அவர்களை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டதன்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பைனான்ஸ் மற்றும் விடுதிகள் நடத்தி வந்த தெற்கு பொய்கைநல்லூர் கீழத்தெருவைச் சேர்ந்த மனோகர் (40) என்பவரை கடந்த 17ம் தேதி இரவு அலுவலகத்தில் அமர்ந்து நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது 3 பேர் கும்பல் மனோகரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க 4 பேர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகப்பட்டினம் மாவட்டம் பறவை பொய்கைநல்லூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதியழகன்(35), நாகராஜன் மகன் விஜய்(26), நீலகண்டன் மகன் ரமேஷ்குமார் (எ) சேட்டு ரமேஷ்(40), ரெத்தினசாமி மகன் அருள்அரசன் (22) ஆகிய 4 பேரையும் வழக்கறிஞர் விக்ரம்தர்மா திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். குற்றவியல் நடுவர் ஹரிராம் குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருவையாறு போலீசாhர் 4 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruvaiyaru court ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு