×

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழா

பெரம்பலூர், ஆக.23: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் தன்னாட்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெற்றனர். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் தன்னாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21வது பட்டம ளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமிசீனிவாசன் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் அனந்தலட்சுமி கதிரவன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் உமாதேவி பொங்கியா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைப்பேராசிரியரும், முன்னாள் முதல்வருமான ராஜேந்திரன் கலந்துகொண்டு, வாழ்க்கையில் கனவு காண்பதன் மூலமே நம் இலக்கை அடையமுடியும் என வாழ்த் துரை வழங்கினார். விழாவில் ஹரியானா மாநிலம், குர்ஹான், எஸ்ஜிடி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த (ஆராய்ச்சி) இயக்குநரும், விஞ்ஞானியுமான மீனாட்சி முன்ஷீ கலந்து கொண்டு இளங்கலையில் 15 பேர், முதுகலையில் 9 பேர் என பல்கலைக்கழக அளவில் தர வரிசைப்பட்டி யலில் இடம் பெற்ற 24 மாணவிகள் உள்பட ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பட்டம் வழங்கினார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலர் நீல்ராஜ், அறக்கட்டளை உறுப்பினர் பூபதி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur ,Thanalakshmi ,Srinivasan ,Women's Autonomous College Graduation Ceremony ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் தனலட்சுமி...