×

சீர்வரிசை, மாப்பிள்ளை அழைப்புடன் தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூர், ஆக. 23: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் மதுரபாஷினி உடனுரை தேவபுரீஸ்வரர்கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேவபுரீஸ்வரர்சுவாமி, மதுரபாஷினியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் கொடி மரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் பழங்கள், மஞ்சள், குங்குமம், இனிப்புவகைகள் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர் மதுரபாஷினியம்மன் சன்னதியில் தேவபுரீஸ்வரர் சுவாமிக்கும், மதுரபாஷினியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாப்பிளை அழைப்பு நடைபெற்றது. பின்னர் தேவபுரீஸ்வரர் சுவாமி, மதுரபாஷியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராமவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : Devur Devapureeswarar temple ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...