×

நாகலாபுரம் அரசு கல்லூரியில் 2ம் கட்ட மாணவர் சேர்க்கை துவக்கம்

விளாத்திகுளம்,ஆக.23: விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.இது குறித்து கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாகலாபுரத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இந்த கல்வியாண்டு 2022-2023 வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ஸ்பாட் அட்மிஷன் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரியில் இளநிலை பட்ட படிப்பில் பொருளாதாரம், வணிகவியல், ஆங்கிலம், பிபிஏ, கணிதம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளும் முதுநிலை பட்டப்படிப்பில் கணிதம், ஆங்கிலம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளது. தகுதியான மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் நகல்கள் மற்றும் புகைப்படங்கள் சமர்ப்பித்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7667738972, 9443151449 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nagalapuram Government College ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருச்சி...