×

மண் அள்ளிய ஜேசிபி பறிமுதல்

திருவாடானை,ஆக.23: திருவாடானை வட்டம் பெருவாக்கோட்டை கிராமத்தில் நேற்ற தாசில்தார் செந்தில்வேல் முருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சித்தாமங்களம் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து, தனக்கு சொந்தமான செங்கல் சூளைக்கு அருகில் உள்ள கால்வாய் கரையை ஜேசிபி உதவியுடன் சேதப்படுத்தி மண்ணை அள்ளி குவித்து கொண்டிருந்தார். ஜேசிபி இயந்திரத்தை கைப்பற்றி மங்களக்குடி வருவாய் ஆய்வாளர் செந்தில்நாதன், கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் மேற்பார்வையில் திருவாடானை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லும்போது ஜேசிபி ஓட்டுநர் மங்களக்குடி அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி சென்றுவிட்டார்.இச்சம்பவம் தொடர்பாக கால்வாய் கரையை சேதப்படுத்திய வேதமுத்து, ஜேசிபி ஓட்டுநர் துரை ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...