×

தொட்டப்பநாயக்கனூரில் நம்ம ஊரு சூப்பரு திட்ட துவக்க விழா

உசிலம்பட்டி, ஆக. 23: உசிலம்பட்டி ஒன்றியம், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் தமிழக அரசின் நம்ம ஊரு சூப்பரு தூய்மை திட்டத்தின் கீழ் சுகாதார பணிகள் துவக்க விழா நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை வகித்து தூய்மை பணியை துவக்கி வைத்தார். விழாவில் இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராம தெருக்களிலும் குப்பைகளை அகற்றி கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படும் எனவும், இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவக்கப்பட்டது. இதில் ஒன்றிய ஆணையாளர் கண்ணன், துணை ஆயைாளர் தெய்வராமன், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணை தலைவர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Namma Puru Superu Project Launch Festival ,Thotapanayakanur ,
× RELATED திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்