×

பருவ மழை துவங்கும் நிலையில் நடப்பாண்டில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

கீழக்கரை:  ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம், மாரியூர், முந்தல், திருப்புல்லாணி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, நதிப்பாலம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான உப்பளங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை பணியாற்றுகின்றனர். ஆனால் அதிகளவில் உற்பத்தி இருந்தும் உப்பை சேகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆறு மாதம் மட்டுமே உப்பு உற்பத்தி இருக்கும். மற்ற ஆறு மாதங்களில் இருக்காது. வழக்கமாக மார்ச் மாதம் உப்பு உற்பத்தி துவங்கும். நடப்பாண்டில் கொரோனா அச்சுறுத்தலால் உற்பத்தி பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது தளர்வை தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கடுமையான வெப்பம் நிலவுவதால், உப்பு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் உப்பு சேகரிப்பு பாத்திகள் சேதமடைகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பை, தொழிற்சாலைகளுக்கு மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். இங்கு கடல் நீரில் உப்பு தயாரிப்பதில்லை. போர்வெல் அமைத்து மோட்டார் பயன்படுத்தி பாத்திகளில் நீரை நிறைத்து வைக்கின்றனர். வெப்பத்தில் ஆவியாகி உப்பாக மாற்றம் பெறுகிறது. உப்பாக மாறியபின் அந்த நிலத்தில் உள்ள கழிவு நீரை மீண்டும் பாத்திகளில் நிறைத்து, உப்பு உற்பத்தி செய்யப்படுவதால், கழிவுகள் இருப்பதில்லை. ஒரு ஏக்கரில் தினசரி 4 டன் உப்பு கிடைக்கிறது. சுழற்சி முறையில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தொடர்ந்து உப்பு எடுக்கப்படுகிறது. அதிகளவு உப்பு உற்பத்தியாலும், சந்தையில் தற்போது உப்புக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காலம் தொடங்குவதற்கு முன்னர் உப்பு உற்பத்தியை மேலும் அதிகரிக்க ஏராளமான பணியாளர்களை கொண்டு உப்பள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது….

The post பருவ மழை துவங்கும் நிலையில் நடப்பாண்டில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Valinokam ,Mariyur ,Munthal ,Tiruppullani ,Devipatnam ,Tiruppalakudi ,Nadippalam ,Dinakaran ,
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...