×

சீர்காழி அருகே மகனை தந்தை கடத்தியதாக தாய் புகார்

சீர்காழி, ஆக.12: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வாணகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவரது மனைவி சுதா (52), மகன் மதன் (24). இவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகன் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை ராஜேந்திரன் வாணகிரி வீட்டில் இருந்த மகனை நள்ளிரவு காரில் கடத்தியதாக தெரிகிறது. காரைக்காலில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மதனை, தாய் மற்றும் உறவினர்கள் பூம்புகார் போலீசார் உதவியுடன் மீட்டு வந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்