×

திருவாரூரில் சத்துணவு ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக.11: திருவாரூரில், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் அளிக்ககோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு சார்பில் சத்துணவு திட்டம் ஒன்று முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து பள்ளிக்கு வரும் வகையிலும், ஏழை எளிய பெற்றோர்கள் சிரமத்தை குறைக்கும் வகையிலும் ஒன்று முதல் 5 வகுப்புகளுக்கு உரிய மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினையும் முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இந்த திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திட கோரியும், இந்த காலை சிற்றுண்டி திட்டத்திற்கு வழக்கம் போல் சத்துணவு பணியாளர்களை கொண்டு சமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், திருவாரூரில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் ஷகிலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் விஜயா, பர்வீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvarur ,
× RELATED வலங்கைமானில் பத்தாம் வகுப்பு...